கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி : பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை
கொழும்பில்(colombo) உள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் ஆரம்பித்துள்ளதுடன் பொதுமக்களிடம் சம்பவம் தொடர்பில் தகவல் அளிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.
காவல்துறையின் தகவலின்படி, தாய் தனது மகளை பாடசாலையிலிருந்து தனது வாகனத்தில் அழைத்துச் செல்ல வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
வாகனத்தில் திடீரென ஏறிய நபர்
அடையாளம் தெரியாத ஒருவர் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தபோது உள்ளே நுழைந்து, மாணவி அமர்ந்திருந்த பின் இருக்கையில் ஏறிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் சந்தேக நபர் தாயிடம் வாகனத்தை முன்னோக்கி ஓட்டுமாறு கோரினார்.
தாய் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், சந்தேக நபரிடமிருந்து தனது மகளை இழுத்து, உதவி கேட்டு கத்தியபடி வாகனத்தை விட்டு வெளியேறினார். இதனையடுத்து சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் விசாரணை
காவல்துறையினர் மதிப்பாய்வு செய்த பாதுகாப்பு கமரா காட்சிகள் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பாடசாலைக்கு அருகில் அதே நபர் சுற்றித் திரிவதைக் காட்டுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் தகவல் தெரிந்தவர்கள் 011-2695411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்தறையினர் கேட்டுக்கொள்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
