கெஹெலியவின் பதவிக்காலத்தில் பார்வையை இழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் பதவிக்காலத்தில், அரச மருத்துவமனைகளில் பிரெட்னிசோலோன் அசிடேட்( Prednisolone Acetate ) கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்திய பின்னர் மேற்கொள்ளப்பட்ட கண் அறுவை சிகிச்சைகளைத் தொடர்ந்து, பார்வையை இழந்த அல்லது பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளுக்கு தலா ரூ. 1 மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 2023 மார்ச் 3 முதல் மே 16 வரை நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட பின்னர் பார்வைக் குறைபாடுகள் ஏற்பட்ட 17 நோயாளிகளுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு கண் சிக்கல்கள்
கண் அறுவை சிகிச்சைகளின் போது அதே பிரெட்னிசோலோன் அசிடேட் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்திய பின்னர், பிற மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கண் சிக்கல்கள் ஏற்பட்டதாகப் பதிவான சம்பவங்களை ஆய்வு செய்ய, சுகாதார அமைச்சு ஒரு சிறப்பு நிபுணர் மருத்துவக் குழுவை நியமித்திருந்தது.

அக்குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த மேலும் நான்கு நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் அளித்த தகவல்களைப் பரிசீலித்த பின்னரே, மேலதிகமாக நான்கு நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
🛑 you may like this...!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |