கொடூரமாக மாணவனைத் தாக்கிய அதிபர் - விசாரணையில் வெளியான பின்னணி!
தெபரவெவ கனிஷ்ட கல்லூரியின் 9ஆம் ஆண்டு மாணவன் ஒருவரை கல்லூரியின் அதிபர் முதுகில் பிரம்பால் தாக்கியதில் காயமடைந்த நிலையில் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம மெதவெலன பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவன் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் பாடசாலையில் இருந்த போது அதிபர் தனது முதுகில் பிரம்பால் தாக்கியதாகவும், தாம் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளதாக திஸ்ஸமஹாராம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கல்லூரியின் அதிபர் லீல் சந்திரகுமாரவிடம் காவல்துறையினர் விசாரித்தபோது,
"ஒவ்வொரு பள்ளியிலும் கீழ்ப்படியாத மாணவர்கள் இருக்கிறார்கள்.
பாடசாலையை விட்டு வெளியேற முயற்சி

மாணவர்களை கொடூரமாக அடித்து பிரச்சனையில் சிக்கிக்கொள்ள எந்த ஆசிரியரும் தயாராக இல்லை. நாங்கள் எப்போதும் மாணவர்களை நல்வழி நடத்த முயற்சி செய்கிறோம். புகார் கொடுத்தது மாணவரின் பெற்றோர் இல்லை என்பது எனக்குத் தெரியும்.
இந்த மாணவன் கட்டுக்கடங்காத வேலைகளில் ஈடுபடுவது அதிகம். அவை ஒழுக்க புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் மாணவனை அகற்றாமல் அவரை நல்வழியில் கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த மாணவன் மட்டுமின்றி, நான்கு மாணவர்கள் பாடவேளையின்போது பாடசாலையை விட்டு வெளியேற முயற்சித்தபோது சிறு தண்டனை கொடுத்தேன்.”என தெரிவித்தார்.
தந்தை புகார்

சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட புகாரில் மாணவன் இரண்டு முறை தாக்கப்பட்டதாகவும் எனது சிறந்த நண்பர்களின் பிள்ளைகளும் இருவர் 4 முறை பிரம்பால் தாக்கப்பட்டதாகவும் அந்த மாணவனின் தந்தை புகார் செய்துள்ளதாக திஸ்ஸமஹாராம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.