இலங்கையில் நிலவும் சுகாதார நெருக்கடி தொடர்பில் ஜெனீவாவில் முறைப்பாடு!
தற்போது இலங்கையில் நிலவும் சுகாதார நெருக்கடி தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார ஜெனிவா நோக்கி நேற்று (09) புறப்பட்டுள்ளாா்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் நாளை (11) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவருடைய விஜயம் அமைந்துள்ளது.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாவது
இறக்குமதி செய்யப்படும் ஊசிகள்
“நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் ஊசிகள் தொடர்பில் சரியான எந்த தகவல்களும் இல்லை. இன்றையளவில் நாட்டில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளார்கள். அவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.

எனவே, இந்த நாட்டில் இடம்பெறும் நிதி மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் கடுமையாக கவனம் செலுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தவுள்ளேன்.“ என தெரிவித்தாா்.
நல்லிணக்க செயன்முறையின் அடிப்படை பொறுப்புக்கூறலேயாகும்! ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டு