நாடாளுமன்ற உறுப்பினர் பலருக்கு கொரோனா தொற்று
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கோட்டேகொடவுக்கு (Nalaka Kottegoda) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அதேவேளை சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்தவுக்கு (Sarathie Dushmantha) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது வேளை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு (Sarath Weerasekera) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நாரஹேன்பிட்டி காவல்துறையின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் தற்போது அங்கொடவில் உள்ள தேசிய தொற்று நோய் மருத்துவமனைக்கு (IDH) மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு (Ra.Shanakiyan) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.