கொரோனா மரணம் தொடர்பில் வெளியான விபரம்!
Srilanka
Corona
Death
By MKkamshan
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,086 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,கொரோனா தொற்றில் இருந்து நேற்றையதினம் பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 607,583 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,281 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 640,578 ஆக அதிகரித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்