வடக்கில் வைத்தியர் உட்பட இருவருக்கு கொரோனா!
srilanka
corona
jaffna
By Vasanth
வடக்கு மாகாணத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட 451 பேரின் பிசிஆர் பரிசோதனையில் 2 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை வைத்தியசாலை மருத்துவர் ஒருவருக்கு தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் சிகிச்சை வழங்கிய நோயாளி ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.