லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Lakshman Yapa Abeywardena Sri Lanka Government Law and Order
By Sathangani Aug 20, 2025 07:24 AM GMT
Report

அரசாங்கத்திற்கு 17 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (Lakshman Yapa Abeywardena) மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க (Jayantha Edirisinghe) ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்ப கட்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்டது.

தேசபந்துவின் முன்பிணை கோரிக்கை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேசபந்துவின் முன்பிணை கோரிக்கை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு

இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், குற்றப்பத்திரிகையில் பல திருத்தங்களைச் சேர்க்கவும் அனுமதி கோரினார். அதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருந்தது.

லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order In The Case Against Lakshman Yapa

அதன் பின்னர், இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள் அடங்கிய ஒரு இறுவெட்டை பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு வழங்கினார்.

அந்த சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி குறித்த ஆவணங்கள் அச்சிடப்பட்ட பிரதிகளில் வழங்கப்பட்டால் அது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்தார்.

சுமந்திரனின் கடையடைப்பால் உறுதியான அநுர அரசாங்கத்தின் பலம்

சுமந்திரனின் கடையடைப்பால் உறுதியான அநுர அரசாங்கத்தின் பலம்

முதற்கட்ட விசாரணை

இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், அவை ஒரு இறுவெட்டின் ஊடாக வழங்கப்பட்டதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order In The Case Against Lakshman Yapa

இதனை அவதானித்த நீதிபதி பிரதிவாதிகள் ஏதேனும் ஆவணங்களை பிரதிகளாக கோரினால் அதனை வழங்குமாறு மனுதாரர் தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் முதற்கட்ட விசாரணை ஆரம்பத்தின் போது பிரதிவாதிகள் தமது ஆட்சேபனை முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்நிலையில் வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார்.

நல்லூர் கந்தனின் 23ஆம் நாள் காலை உற்சவம்

நல்லூர் கந்தனின் 23ஆம் நாள் காலை உற்சவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026