இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா!
COVID-19
Sri Lanka
By Vanan
இரண்டாம் இணைப்பு
கொரோனா தொற்று உறுதியான மேலும் 167 பேர் அடையாளம் இன்று காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 666,580ஆக அதிகரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்த மரணங்கள் நேற்று (05) இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த விபரங்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை
உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர்.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,583 ஆகும்.
இதேவேளை, இலங்கையில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 666,580 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 6 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி