வெளிநாட்டு சக்திகளால் சிறிலங்காவுக்கு ஆபத்து!!
உலகின் மிகப்பெரிய இரு நாடுகளை பரஸ்பரம் ஏமாற்றி, அவர்களிடம் இருந்து அதிகபட்ச இலாபத்தை அடைவதற்கு சிறிலங்கா மேற்கொள்ளும் முயற்சியானது அபாயகரமானது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் இறுதியில் சங்கடமான நிலையை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“பூகோள அரசியல் அதிகாரப் போட்டிக்குள் சிறிலங்கா தற்போது சிக்கியுள்ளது.
கணிசமான அழுத்தங்கள் மற்றும் செல்வாக்குகளை பிரயோகிக்கும் வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து தற்போதைய ஆட்சியாளர்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.
இரண்டு மிகப் பெரிய நாடுகளின் பூகோள அரசியல் பிரச்சினைகளின் விளைவுகளை எதிர்நோக்கும் இடமாக சிறிலங்கா தற்போது மாறியுள்ளது. ஆகவே நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
தேவையற்ற வகையிலும் துரதிஷ்டவமாகவும் இந்த அரசாங்கம் பூகோள அரசியல் பதற்றத்திற்கு வழியேற்படுத்தியுள்ளது. இதனை தவிர்த்திருக்கலாம் எனக் கூறியுள்ளார்.