டெங்கு பரவல் தீவிரம் : கொழும்பு பல்கலை கல்வி நடவடிக்கைகள் இணையவழியில்
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களுக்கான விரிவுரைகளை ஒரு வாரத்திற்கு இணையவழியில் நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு நோய்த்தொற்று பரவி வருவதன் காரணமாக இந்த தீ்ர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் நாளை (10) முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை இணையவழியில் நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
கல்வி நடவடிக்கைகள்
கலைப்பீடம், சட்டப்பீடம், கல்விப்பீடம், முகாமைத்துவ மற்றும் நிதிப்பீடம் ஆகியவை இந்தக் காலகட்டத்தில் தங்களது கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் நடத்தும் என்றும் அவர் கூறினார்.

பல்கலைக்கழகம் மூடப்படாது என குறிப்பிட்ட அவர் அனைத்து ஊழியர்களும் வழக்கம் போல் பணிக்கு வர வேண்டும் எனவும், அனைத்துப் பல்கலைக்கழக விடுதிகளும் திறந்திருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 39 நிமிடங்கள் முன்