தேசபந்துவின் பதவி : நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை
தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, பிரேரணை இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வில் சமர்பிக்கப்படவுள்ளது.
தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குமாறு தெரிவித்து 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்குப் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்தனர்.
தவறான நடத்தை,
குறித்த பிரேரணையில் அவரது தவறான நடத்தை, பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தியமை, காவல்துறை மா அதிபர் பதவியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தநிலையில், 2022 ஆம் ஆண்டும் ஐந்தாம் இலக்க சட்டத்தின் பிரகாரம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் உயர் பதவியில் இருக்கின்ற அரச அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான யோசனையாகவே இந்த பிரேரணை இன்று (08) நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான விசேட குழுவை நியமிக்கும் இந்த பிரேரணை விவாதம் இன்றி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
