எக்ஸ் தொற்று குறித்து எச்சரித்துள்ள உலக சுகாதார நிறுவனம்
சமீப சில ஆண்டுகளாக எதிர்பாராத விதமாக மனித குலங்களைத் தாக்கும் பல்வேறு நோய்க் கிருமிகளின் பரவல், அடுத்ததாக வரவிருக்கும் டிசிஸ் எக்ஸ் (Disease X) மிகப்பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்று கொவிட் தொற்றுக்கு லண்டன் தடுப்பூசியைக் கண்டுபிடித்த Taskforce ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த கேட் பிங்க்ஹாம் தெரிவித்துள்ளார்.
டிசிஸ் எக்ஸ் (Disease X) என்பது கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து உலகையே பயமுறுத்திக் கொண்டிருந்த கொவிட் 19 பெருந்தொற்றைக் காட்டிலும் மிக ஆபத்தான சர்வதேச தொற்றாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் (world health organization) எச்சரிக்கிறது.
ஃப்ளூ பெருந்தொற்று
கடந்த 1918 - 19 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஃப்ளூ பெருந்தொற்று 50 மில்லியன் மக்களை உயிர்ப்பலி வாங்கியது.

இது கிட்டதட்ட முதல் உலகப் போரில் உயிரிழந்தவர்களை காட்டிலும் இரண்டு மடங்காகும். சமீப காலங்களில் ஏற்படுகிற பல பெருந்தொற்றுக்களும், வைரஸ்களும் இதுபோல தொடர்ச்சியாக லட்சக்கணக்கானோரை உயிர்ப்பலி கொண்டிருக்கிறது.
அந்த வைரஸ் தொற்றுக்கள் இன்றைக்கும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வடிவங்களில் உயிர் வாழ்ந்து வெவ்வெறு திரிபுகளால் மக்களை பாதித்துக் கொண்டு தான் இருக்கிறது.
ஏற்கனவே பரவியிருந்த வைரஸ் தொற்றுக்கள் ஆங்காங்கே உயிர் வாழ்கின்றன. அவை தங்களை தகவமைப்புக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொண்டு புதிய புதிய திரிபுகளாக வெளிவருகின்றன.
அப்படி தங்களுக்குள் மாற்றங்களோடு வரும் புதிய திரிபுகள் மிக வீரியமிக்கதாக மாறிக் கொண்டே இருக்கின்றன.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 19 மணி நேரம் முன்