அகற்றப்பட்ட கருணாநிதி- மு.க.ஸ்டாலின் -உதயநிதி புகைப்படங்கள்! புதிய அரசுக்கான அதிரடி ஏற்பாடுகள்
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளைப் புதிய அமைச்சர்களுக்காகத் தயார் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலில் அவரது கட்சி 108 இடங்களைக் கைப்பற்றி உள்ள நிலையில் விரைவில் விஜய் தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது.
அமைச்சர்களின் அறைகள்
இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் அனைத்தும் மீள ஒழுங்கமைக்கப்படுகின்றன.

இதனடிப்படையில் தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் தங்களது அறைகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
அத்தோடு அங்கிருக்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது புகைப்படங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.
விரைவில் தலைமை
இதேபோல் அடையாறில் உள்ள அமைச்சர்களின் இல்லங்களை ஒழுங்கமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமைச்சர்கள் தங்களது பொருட்கள் மற்றும் உடமைகளை எடுத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
தொடர்ச்சியாகப் புதிதாகப் பொறுப்பேற்கும் விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகிக்க உள்ள அமைச்சர்கள் விரைவில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளைப் பயன்படுத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |