கடும்போக்குவாத மதங்களைப் பின்தொடர வேண்டாம் : ஞானசார தேரர் கோரிக்கை
கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சில கூட்டுத் தற்கொலைச் சம்பவங்கள் மத போதகர் ஒருவரின் போதனைகளினால் ஏற்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கூட்டுத் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பௌத்த தர்மம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உயிரை மாய்த்துக் கொள்வது பாவச் செயல் என பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு உதவுதலும் பாரிய பாவச் செயல் என பௌத்த தர்மம் கூறுகின்றது.
இந்நிலையில், நாம் தர்ம மார்க்க நெறியில் பயணிக்க வேண்டும். கடும்போக்குவாத மதங்களை பின்தொடர்ந்து பெறுமதியான உயிர்களை அழித்துக் கொள்ளத் தேவையில்லை.
காளான் முளைப்பது போன்று உருவாகும் மதக் கும்பல்கள் மத போதகர்கள் தொடர்பில், மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
