உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்
protest
italy
easter attack
By Jaso
இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று மதியம் 3.00 மணியளவில் இத்தாலியில் மிலன் மத்திய ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் நிரந்தரமாக முடங்கிய ஒரு குழுவும் உள்ளது.
இலங்கையில் வாழும் பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமுகத்தினரை பாதுகாக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.