மின்சார சபையின் ஊழல் மோசடிகள்! முன்வைத்துள்ள தரவுகள் பொய்யானவை: சம்பிக்க குற்றச்சாட்டு

Champika Ranawaka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Public Utilities Commission of Sri Lanka
By Sathangani Feb 19, 2024 04:22 AM GMT
Report

மின்கட்டணம் குறைப்புக்காக மின்சார சபை சமர்ப்பித்துள்ள தரப்படுத்தல்களின் உண்மை தன்மையை ஆராய்வதுடன் நாட்டு மக்களுக்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடமைகளை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும். என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை மின்கட்டமைப்பின் நெருக்கடியால் தேசிய பொருளாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையை மீட்டெடுத்த நாடுகள்! பெருமை கொள்ளும் அமெரிக்கா

இலங்கையை மீட்டெடுத்த நாடுகள்! பெருமை கொள்ளும் அமெரிக்கா

ஊழல் மோசடியில் ஈடுபடல்  

மின்சார சபை முன்வைத்துள்ள மின்னுற்பத்திக்கான செலவு உள்ளிட்ட பல தரவுகள் பொய்யானவை, மின்நிலையங்களின் நிலையான கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மின்சார சபையின் ஒருசில அதிகாரிகள் கணிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், இந்த திறமையை கொண்டு அவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட முயற்சிக்கிறார்கள்.

மின்சார சபையின் ஊழல் மோசடிகள்! முன்வைத்துள்ள தரவுகள் பொய்யானவை: சம்பிக்க குற்றச்சாட்டு | Electricity Tariff Increased By 40 Percent In Sl

மின்கட்டணம் குறைப்புக்காக மின்சார சபை சமர்ப்பித்துள்ள தரப்படுத்தல்களின் உண்மை தன்மையை ஆராய்வது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடமையாகும். எனவே நாட்டு மக்களுக்காக ஆணைக்குழு கடமைகளை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும்.

மின்கட்டமைப்பின் நெருக்கடியால் தேசிய பொருளாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளன.

படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 30ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 30ஆம் ஆண்டு நினைவேந்தல்

இலங்கையின் கைத்தொழிற்துறை பாதிப்பு 

அத்துடன் கைத்தொழிற்துறையில் மின்பாவனைக்கான கேள்வி நூற்றுக்கு 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளின் மின்கட்டணத்துக்கு அமைவாக இலங்கையில் மின்கட்டணம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழிற்துறையில் அதிக போட்டித்தன்மை நிலவும் வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் தென்னிந்தியாவுக்கு இணையாக இலங்கையில் 40 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் ஊழல் மோசடிகள்! முன்வைத்துள்ள தரவுகள் பொய்யானவை: சம்பிக்க குற்றச்சாட்டு | Electricity Tariff Increased By 40 Percent In Sl

அதற்கமைய இலங்கையில் கைத்தொழிற்துறை பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. குறைந்தளவான மின்கட்டணம் உள்ள போட்டித்தன்மையான நாடுகளுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செல்கின்றார்கள்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டோம், அரச வருமானத்தை அதிகரித்து விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. 2020 ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் ஒவ்வொரு தனிநபரிடமிருந்து நேரடி மற்றும் மறைமுக வரிகள் ஊடாக 01 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளது.

உலகிலே அதிக தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா...

உலகிலே அதிக தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா...

பொருளாதார நெருக்கடி 

பொருளாதாரம் ஒடுக்கப்பட்டுள்ளதால் மேலும் 01 இலட்சம் ரூபாவை அறவிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் மக்களின் பக்கம் இருந்து மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

அதிகளவான மின்கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக 2028 ஆம் ஆண்டளவில் வெளிநாட்டு அரசமுறை கடன்களை செலுத்த முடியாமல் போகும்.

மின்சார சபையின் ஊழல் மோசடிகள்! முன்வைத்துள்ள தரவுகள் பொய்யானவை: சம்பிக்க குற்றச்சாட்டு | Electricity Tariff Increased By 40 Percent In Sl

யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய நிலை நீடித்தால் 2028 ஆம் ஆண்டு நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும். இவ்வாறான பின்னணியில் மின்சார சபை தொடர்பில் விசேட கவனம் செலுத்துவது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

மின்சார சபையின் செலவுகளை கட்டுப்படுத்தல் அத்தியாவசியமானது. மக்களுக்காக ஆணைக்குழு செயற்படாமல் இருந்தால் ஆணைக்குழுவுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைவார்கள்“ என தெரிவித்தார்.

37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இலங்கையில்

37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இலங்கையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026