தமிழர்களின் நியாய மறுப்பால் இலங்கைக்கு திண்டாட்டம்
தமிழர்களுக்கு உரித்தான நியாயமான விடயங்களை மறுத்த காரணத்தினால் தான் தேசிய இனப்பிரச்சினை இன்று தொடர்கிறது. ஜனநாயக ரீதியான வழிமுறைகள் எல்லாம் தோல்வியடைந்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தமிழர்கள் ஆயுதம் தூக்க தள்ளப்பட்டார்கள்.
அதனால் தான் யுத்தம் நடந்தது. யுத்தம் நடத்த காரணத்தினால் தான் நாடு அதளபாதாளத்தில் விழ்ந்தது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது மட்டும்மல்ல, யுத்த வெற்றி காரணமாக தான் “துட்டகைமுனு மறு அவதாரம்” என்ற ஒரு பட்டத்தை தானாகவே கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் பெற்றார்கள். ஆகவே தான் நாடு இந்த நிலைக்கு வந்திருக்கின்றது.
அதற்கு காரணம் தமிழர்களுக்கு நியாயம் வழங்க மறுத்தது தான்.
ஒரு பிரதேச சபை தலைவர் அனுபவம் இல்லாத ஒரு நபரை, ஒரு அடி முட்டாளை, நாட்டின் அரச தலைவர் ஆக்கிவிட்டு இப்போது திண்டாடுகின்றீர்கள் என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கும் விடயங்கள் காணொளி வடிவில்,
