21வது அரசியலமைப்பு சீர்திருத்தம் உருவாக்கப்பட்டாலும், நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது: ரணில் விக்ரமசிங்க
20th Amendment
Gotabaya Rajapaksa
Sri Lanka
21st Amendment
By Kiruththikan
21வது அரசியலமைப்பு சீர்திருத்தம் உருவாக்கப்பட்டாலும், நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தின் போதே முன்னாள் பிரதமர் ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
20ஆவது திருத்தச் சட்டத்தில் தமக்கு விருப்பம் இல்லை எனவும், 21ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவது கடினம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டொலர் தட்டுப்பாடு மற்றும் மோசமான நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அரசாங்கம் ஸ்திரமற்ற நிலைக்குச் சென்றுள்ளதாகவும், இதனால் மக்களின் அன்றாட வாழ்வில் எரிவாயு, உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி