மண்டைதீவு மனிதப் புதைகுழி சாட்சியங்கள்..! வேலணை பிரதேச சபையில் முன்வைப்பு
மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள், யுவதிகள் குறித்து சாட்சியங்கள் இருப்பதாக வேலணை பிரதேச சபை உறுப்பினர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் இன்று (20.08.2025) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்ற போதே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டனர்.
புதைகுழியின் உண்மைகள்
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் பிரகலாதன் கூறியுள்ளார்.
இதன்படி, இந்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, செம்மணி புதைகுழி விவகாரம் பூதாகரமாக இருக்கும் இன்றைய சூழலில் வேலணை பிரதேசத்தில் 90 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் இந்த புதைகுழியையும் அகழ்வதற்கு அப்பிரதேசத்தை உள்ளடக்கிய பிரதேச சபையாக இருப்பதால் அதை வலியுறுத்தவே இந்த விவகாரம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வு
இது குறித்து சபையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த மனிதப் புதைகுழி விவகாரம் காலத்துக்கு காலம் தேர்தல் அரசியல் பேசும் பொருளாக இருப்பதால் இது தொடர்பிலான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் பிரதேச சபை உறுப்பினர் பிரகலாதன் கூறியுள்ளார்.
இதேவேளை, குற்றவாழிகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வும் பரிகாரமும் வழங்குவது அவசியம் என்றும் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த்,பார்த்தீபன், மற்றும் கருணாகரன் நாவலன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த ஆதாரங்களுடன் துறைசார் தரபுக்கு அறிக்கை அனுப்பப்ப சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
