முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை (Prasanna Ranaweera) எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (04) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணவீர, மஹர நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றினால் பிடியாணை
2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரணடையாமல் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தார்.
இந்தநிலையில் பிரசன்ன ரணவீர கடந்த மே மாதம் 07 ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
