திருகோணமலையில் வெடிப்பு சம்பவம் - ஒருவர் பலி
death
blast
trincomale
By Sumithiran
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் இன்று (07) பிற்பகல் 12.40 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவெளி-ஜாயாநகர் பகுதியைச் சேர்ந்த இமாம்தீன் அஷ்மீர் (26வயது) எனவும் தெரியவருகின்றது.
டைனமைட் என்றழைக்கப்படும் வெடி பொருளை பயன்படுத்தி மூவர் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது குறித்த வெடி பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி