கூரிய ஆயுதத்தால் தந்தையை தாக்கிய மகனால் நேர்ந்த விபரீதம்..!
மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவனெல்ல மகேல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் 20 வயது மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம்
இறந்தவர் நேற்று (25ம் தேதி) இரவு மனைவியுடன் தகராறு செய்ததாகவும் சம்பவத்தின்போது தந்தையை மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்குப்பின், சடலம் மீதான பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மகன் இன்று (26) மாவனல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
