யாழில் இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்னால் அணிதிரளவுள்ள மீனவர்கள்

jaffna protest fisherman indian consulate
By Sumithiran Aug 05, 2021 11:50 AM GMT
Report

இந்திய மீன்பிடியாளர்கள் மீது நாம் பகைமை காட்டவில்லை. ஆனால் நாளந்தம் அவர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளள முடியாதென தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள், இந்திய மீன்பிடியாளர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில். தாம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக அமையத்தில் இன்றையதினம் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை குறித்த சமாசங்களின் பிரதிநிதிகள் நடத்தியிருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர். மேலும் அவர்கள் கூறுகையில்,

இந்திய கடற்றொழிலாளர்களது அத்துமீறிய, எல்லை தாண்டிய, சட்டவிரோத ரோலர் இழுவைமீன்பிடி முறையால் எமது சொத்துக்கள் நாளாந்தம் அபகரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றன. இதை தடுத்து நிறுத்தி எமது தொழில் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பை உறுதிசெய்து தருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அது தொடர்பான நடவடிக்கைகளை அவர்கள் துறைசார் தரப்பினரூடாக மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தீவகம் மற்றும் தாளையடி பகுதிகளுக்கள் ஊடுருவிய இந்திய மீனவர்கள் எமது கடற்றொழிலாளர்களது பல கோடி பெறுமதியான வலைகளை அறுத்து நாசமாக்கிச் சென்றுள்ளனர். இவ்வாறான செயற்பாட்டை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திய குறித்த சமாசங்களின் பிரதிநிதிகள் இலங்கை அரசு இந்திய அரசிடம் இது தொடர்பில் பேசி நிரந்தர தீர்வை காணவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

மேலும் இந்திய மீனவர்கள் தமது சட்டவிரோத செயற்பாடுகளை மறைப்பதற்கு மீண்டும் இலங்கை கடற்படையினர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சினையை திசைதிருப்பி வருகின்றனர்.

ஆனால் சில தினங்களுக்கு முன்னர் இந்திய மீனவர்களின் ரோலர்களால் எமது கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் அழிக்கப்டவிருந்த நிலையில் இலங்கை கடற்படையினர் உடனடியாக அவ்விடத்தக்கு வந்து எமது கடற்றொழிலாளர்களை பாதுகாத்திருந்தனர். இந்நிலையில் எமது சொத்துக்களை பாதுகாத்துதந்த கடற்படையினருக்கு எமது சமாசங்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் இந்திய மீனவர்களால் அத்துமீறி மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளால் நாளாந்தம் எமது கடல் வளம் சுரண்டப்படும் நிலையில் எமது தொழிலாளர்களின் அடிச்சுவடியே இல்லாதுபோகும் நிலை உருவாகியுள்ளது.

எனவே எமது கடல் தொழில் நடவடிக்கைகளை பாதுகாத்து எமது தொழிலாளர்களின் பொருளாதாரத்தை உறுதிசெய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இந்த சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020