கட்டுநாயக்கவில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் வான்வெளி மூடப்பட்டதால், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நோக்கி புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் இன்று (01) மாலை 05.00 மணி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 06.15 மணி நிலவரப்படி, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவிருந்த 18 விமானங்களும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 25 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று (28) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட்ட 02 ஃபிட்ஸ் ஏர் மற்றும் ஏர் அரேபியா விமானங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பின.
பயணிகளுக்கு அறிவித்தல்
இதற்கிடையில், மத்திய கிழக்கு அல்லது மத்திய கிழக்கு வழியாக பிற இடங்களுக்குச் செல்லும் பயணிகள் தங்கள் விமானப் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்ளுமாறு, அவர்களின் மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு கவனம் செலுத்துமாறு அல்லது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு விமான விவரங்களைப் புதுப்பிக்குமாறு கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டு பயணிகளுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு பணிப்பாளர் நாயகம் 07 நாட்கள் விசா நீட்டிப்பு வழங்கியுள்ளார்.
இருப்பினும், அவுஸ்திரேலியா, சீனா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, தாய்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு புறப்படும் மற்றும் வரும் விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |