ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி : முன்னாள் ஜனாதிபதியும் படுகொலை
ஈரானின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய 'வியூக ஆலோசனைச் சபையின்' உறுப்பினருமான மஹ்மூத் அஹ்மதிநெஜாத் அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை இரவு தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் போது முன்னாள் தலைவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதுகாவலர்களுடன் சேர்த்து படுகொலை
சுருக்கமான செய்திக் குறிப்பில், அஹ்மதிநெஜாத் அவரது பல தோழர்களுடன் சேர்ந்து கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ ஈரானிய நிறுவனங்கள் உறுதிப்படுத்தின

2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப்த மஹ்மூத் அஹ்மதிநெஜாட் (Mahmoud Ahmadinejad), பதவி வகித்தார்.
வடகிழக்கு தெஹ்ரானின் 'நர்மக்' (Narmak) பகுதியில் அமைந்துள்ள அஹ்மதிநெஜாட்டின் உத்தியோகபூர்வ இல்லத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வியூக ஆலோசனை சபை உறுப்பினராக நியமனம்
மஹ்மூத் அஹ்மதிநெஜாட் ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னர், அர்டபில் (Ardabil) மாகாணத்தின் ஆளுநராகவும், தெஹ்ரான் நகர மேயராகவும் பணியாற்றியிருந்தார். அவரது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியால் அவர் 'வியூக ஆலோசனை சபையின்' உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

உச்ச தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, ஈரானிய அரசியலில் மற்றுமொரு பலமிக்க ஆளுமையான அஹ்மதிநெஜாட் இவ்வாறு கொல்லப்பட்டமையானது, அந்நாட்டு ஆட்சியமைப்பிற்கு விழுந்த மற்றுமொரு பாரிய அடியாகக் கருதப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |