இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதலை காணொளி எடுத்த இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி
இஸ்ரேலின் டிமோனா நகரில் நேற்று இரவு நிகழ்ந்த ஏவுகணை தாக்குதலில் காயமடைந்த நான்கு இலங்கையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.
தூதரின் தகவலின்படி, பாதுகாப்பு தங்கும் இடங்களுக்கு செல்லாமல் வெளியில் இருந்து சம்பவத்தை காணொளி எடுக்க முயன்றபோது அவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்தின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு வழிமுறை
ஏவுகணை தாக்குதலின் தாக்கத்தால் அருகிலிருந்த கட்டிடங்களின் கண்ணாடிகள் சிதறி விழுந்ததால், அந்த கண்ணாடித் துண்டுகள் அவர்களின் தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் பட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான செயல்கள், இஸ்ரேல் அதிகாரிகள் வெளியிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை மீறுவதாக தூதுவர் எச்சரித்துள்ளார்.
எச்சரிக்கை சைரன்கள்
எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கும் போது, பொதுவாக மூன்று நிமிடங்களுக்கு முன்பே தாக்குதல் அபாயம் இருப்பதால், உடனடியாக பாதுகாப்பு தங்கும் இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அவர் இலங்கையர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையில், அனைத்து இலங்கையர்களும் அதிகாரிகள் வழங்கியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |