பிரான்ஸின் தலைவிதி மாறுமா? இன்று இறுதி முடிவுகள்!!
பிரான்சில் நாளை அரச தலைவர் தேர்தலின் இறுதிச்சுற்று வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், பிரான்சின் கடல் கடந்த பிராந்தியங்களான கயானா, மேற்கிந்திய தீவுகள், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் ஏற்கனவே வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.
இன்று (24) ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னர் கருத்துக் கணிப்புகள் அல்லது தேர்தல் முடிவுகளின் மதிப்பீடுகளை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பிரெஞ்சுக் குடியுரிமை கொண்ட புலம்பெயர் தமிழர்கள் உட்பட 48.7 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.
பிரான்சின் தற்போதைய அரச தலைவர் இம்மானுவேல் மக்ரன், அதிதீவிர வலதுசாரி வேட்பாளர் மறின் லூ பென்னை எதிர்கொள்ளும் இந்தத் தேர்தல் மூலம் பிரான்சில் எதனையும் மாற்றாதென்ற மனோநிலை வாக்களர்களிடம் அதிகரித்துள்ள நிலையில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
தாங்கள் ஏற்காத ஒரு அரச தலைவரை தெரிவுசெய்யவேண்டிய நிலை தமக்கு உருவாகியுள்ளதான கவலை கணிசமான வாக்களர்களிடம் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இந்தமுறை மக்ரனுக்கு எதிராகவும், அதேபோல மறின் லூ பென்னுக்கு எதிராகவும் ஒரு சக்திவாய்ந்த வாக்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருத்துக்கணிப்புகள் யாவும் இமானுவேல் மக்ரன் மீண்டும் தெரிவுசெய்யப்படுவார் என எதிர்வு கூறியுள்ளன.
இந்தத் தேர்தல் களத்தில் பிரெஞ்சுக் குடியுரிமை கொண்ட புலம்பெயர் தமிழர்களும் வாக்களிக்காதுள்ளதால், அவர்கள் கட்டாயமாக தமக்கிருக்கும் ஜனநாயக கடமையை ஆற்ற மறக்காமல் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .