நுளம்பு ஒழிப்புக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒதுக்கபட வேண்டும்: தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு
Sri Lanka
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
By Dhilak
நுளம்பு ஒழிப்புக்காக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையை ஒதுக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
பாடசாலை மட்டத்தில் குழுக்கள் நியமிக்கப்பட்டு இந்த ஆணையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கை
இந்த வருடத்தில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,711 ஆக உயர்ந்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேல் மாகாணத்தில் 30,500ஆக அதிக எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் 38 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்