கிளிநொச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் எரிபொருள் மீட்பு
கிளிநொச்சி - இராமநாதபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் தனியார் ஒருவர் பதுக்கி வைத்திருந்த 1220 லிட்டர் பெட்ரோல் மற்றும் 530லீற்றர் டீசல் என்பன மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பு மேற்கொண்ட இராமநாதபுரம் காவல்துறையினர் பதுக்கி வைத்திருந்த எரிபொருளை பறிமுதல் செய்துள்ளதுடன் தொடர்புடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
இரண்டு இடத்தில் எரிபொருள் பறிமுதல்
இதேவேளை, கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 247 லீட்டர் டீசலும் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை 22.03.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |