கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை : கொலையாளி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்

Sri Lanka Army Sri Lanka Police Colombo Law and Order
By Sathangani Feb 20, 2025 06:07 AM GMT
Report

கணேமுல்ல சஞ்சீவவின் (Ganemulla Sanjeewa) கொலையின் முக்கிய சந்தேக நபராக கைது செய்யப்பட்டவர்  இராணுவ கமாண்டோ சிப்பாயோ அல்லது புலனாய்வு அதிகாரியோ அல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படைப் பயிற்சியை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவர் ஒரு கமாண்டோ சிப்பாயோ அல்லது உளவுத்துறை அதிகாரியோ அல்ல என்றும் கூறப்படுகிறது.

இராணுவப் பயிற்சியின் போது தப்பிச் சென்ற குறித்த சிப்பாய், பின்னர் பொது மன்னிப்புக் காலத்தின் கீழ் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியுள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - பலப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற பாதுகாப்பு

நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - பலப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற பாதுகாப்பு

கொலை செய்த நபர் 

அன்றிலிருந்து அவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், சுமார் 6 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், தெஹிவளை, வட்டரப்பலவில் நடந்த இரட்டைக் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை : கொலையாளி தொடர்பில் அதிர்ச்சித் தகவல் | Ganemulla Sanjeewa Murder Suspect Investigation

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் எண் நீதவான் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபர் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, நீதிமன்றிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என்று காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் நேற்று (19) பிற்பகல் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல உண்மைகளை காவல்துறையினரால் வெளிக்கொணர முடிந்துள்ளது.

நீதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்: அதிகரிக்கும் அழுத்தம்

நீதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்: அதிகரிக்கும் அழுத்தம்

அடையாள அட்டைகள் 

இது தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க, புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த நபர் பல பெயர்களில் தோன்றியவர் என்று தெரிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை : கொலையாளி தொடர்பில் அதிர்ச்சித் தகவல் | Ganemulla Sanjeewa Murder Suspect Investigation

அவரிடம் பல அடையாள அட்டைகள் இருப்பதாகவும், அதில் ஒன்றில் சட்டத்தரணியாக பணிபுரிவதைக் குறிக்க தயாரிக்கப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டையும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

அவர் முதலில் மொஹமட் அஸ்மன் ஷெரிப்தீன் என்ற பெயரில் தோன்றியதாகும், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனராச்சி என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: முன்னாள் எஸ்டிஎப் வீரர் அதிரடி கைது!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: முன்னாள் எஸ்டிஎப் வீரர் அதிரடி கைது!

கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள்

கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயரைக் கொண்ட போலியான சட்டத்தரணி அடையாள அட்டையையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை : கொலையாளி தொடர்பில் அதிர்ச்சித் தகவல் | Ganemulla Sanjeewa Murder Suspect Investigation

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்கால விசாரணைகளில், இந்த சந்தேக நபர் மற்றும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரையும் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரியும், அவருக்கு உதவிய பெண்ணும் நீதிமன்றில் இருந்து தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை உலுக்கிய துப்பாக்கி சூட்டின் திடுக்கிடும் பின்னணி

நாட்டை உலுக்கிய துப்பாக்கி சூட்டின் திடுக்கிடும் பின்னணி



You may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024