தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
இலங்கையில் இன்று (30) காலை முதல் சற்றே குறைந்திருந்த தங்கத்தின் விலை, நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,075 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
முதலாம் இணைப்பு
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று (30) குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (29) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலையில் 2,000 ரூபாய் குறைவடைந்துள்ளது.
அதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவித்துள்ளது.
விலை நிலவரம்
இந்த நிலையில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,850 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் சர்வதேச ரீதியில் தங்கத்திற்கான கேள்வியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே உள்நாட்டிலும் இந்த விலை சரிவுக்குக் காரணம் எனச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |