ஜெனிவாவில் தப்பிக்க இந்தியாவை வளைக்கும் கோட்டாபய - வெளிப்படுத்திய ஆங்கில ஊடகம்

india geneva gotabaya
By Sumithiran Jan 17, 2022 12:56 AM GMT
Report

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் இலங்கைக்கு பாதகமான நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரச தலைவர் கோட்டாபய இந்தியாவின் ஆதரவுடனான இனநல்லிணக்க முயற்சிகள் குறித்து அறிவிக்கவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தும்போது அரச தலைவர் கோட்டாபய, இந்தியாவின் ஆதரவுடனான நல்லிணக்க முயற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக வாக்குறுதி வழங்குவார். அவரின் உரையின் முக்கிய விடயமாக இதுவே காணப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கம் அறிவிக்கவுள்ள நல்லிணக்க திட்டத்திற்கான வரையறைகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது இடம்பெறுகின்றன-பொதுவான உடன்படிக்கைகளில் உள்ள சிக்கல்களை ஆராயவேண்டியுள்ளது. இலங்கையின் அரசியல் தலைவர்கள் பரந்துபட்ட உறுதிமொழிகளை வழங்கியுள்ள 13வது திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது- இந்திய தலைவர்களும் இதனை அங்கீகரித்துள்ளனர். இதற்கு முன்னோடியாக இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு இந்த விடயத்தில் ஆதரவு கிடைத்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள புதிய சாதகமான சூழ்நிலை காரணமாக – ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது ஆதரிப்பதன் மூலம் -இலங்கைக்கு உதவுவது தொடர்பில் தமிழ்நாட்டில் காணப்படும் விமர்சனங்களை தவிர்க்க கூடிய சாதகமான நிலை புதுடில்லிக்கு கிடைக்கும்.

எனினும் எவ்வாறான விடயங்களிற்கு தீர்வை காணவேண்டும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில்நடைபெற்ற தேர்தலில் நான்கு ஆசனங்களை வென்ற பா.ஜ.க இலங்கை தமிழர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதன் மூலம் மாநிலத்தில் அதன் நிலையை மேலும் மேம்படுத்த முயலும் என கருதுகின்றது.

தமிழ்கட்சிகள் பொதுவான நிலைப்பாட்டை முன்வைக்கவேண்டும் – அதன் மூலம் அதனை ஆரம்பபுள்ளியாக கருதலாம் என புதுடில்லி தமிழ் கட்சிகளிற்கு வேண்டுகோள் விடுத்திருப்பதற்கும் இதுவே காரணம்.

எனினும் இந்த ஆரம்பகட்ட முயற்சிகளில் மலையக முஸ்லீம்கட்சிகளின் நிலைப்பாடுகள் காரணமாக பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன எனினும் தற்போது புதிய வரைபொன்றை தயாரிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன அது எந்தவேளையிலும் தயாராகலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  

ReeCha
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்