இந்த அரசு ஆளுநரை காணி பிடிப்பதற்காகவா வடக்கிற்கு அனுப்பியுள்ளது? - சிறீதரன்

Government military Governor S.Shritharan
By MKkamshan Dec 04, 2021 08:39 AM GMT
Report

வடக்கிற்கு வந்துள்ள புதிய ஆளுநரான ஜீவன் தியாகராஜா, 'காணி அளப்பதற்கு யாரும் இடையூறாக இருந்தால் அது அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் சரி பிடித்து உள்ளுக்கு தள்ளுவேன்' என கூறுகின்றார்.

இந்த அரசு ஆளுநரை காணி பிடிப்பதற்காகவா வடக்கிற்கு அனுப்பியுள்ளது? என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் (S.Shritharan) கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு,   உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு,   ஆகியவற்றுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கிற்கு ஆளுநராக வந்ததது, நல்லிணக்கத்தை உருவாக்கி அபிவிருத்தியை ஏற்படுத்தவா அல்லது தமிழ் மக்களின் காணிகளை பறித்து இராணுவத்துக்கும் கடற்படைக்கும் கொடுக்கவா நியமிக்கப்பட்டுள்ளார்?

எனவே, இவரை வடக்கிற்கான ஆளுநராக நியமித்தவர்கள் அது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களை குறிவைத்ததாகவே பெருமளவு நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியில் பல கட்டிடங்கள் இலங்கையின் முப்படைகளினால் வடக்கில் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களுடைய தனியார் காணிகளில் கட்டுவதற்காக செலவிடப்படவுள்ளன.

கடந்த வாரம் கூட மாதகல், பருத்தித்துறை, வலிகாமம் வடக்கு போன்ற பிரதேசங்களில் மக்களின் காணிகளை அளக்கும் நடவடிக்கைகள் படையினர் நில அளவைத்திணைக்களம் மூலம் முன்னெடுக்கின்றனர். இவ்வாறான நிலங்களில் பாரிய கட்டிடங்கள், விகாரைகள் அமைக்கப்படுகின்றன.

இவை எல்லாம் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தான் நடக்கின்றனவா?

வடக்கின் கடற்கரையோரங்களில் கரையொதுங்கியுள்ள 6 சடலங்களும் யாருடையது என்பதனை காவல்துறையினரால் இதுவரையில் ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை?

சடலங்கள் கரையொதுங்குவதற்கு காரணம் என்ன? இவ்வாறு சடலங்கள் கரையொதுங்குவதற்கு பொறுப்புக்கூறுவது யார்? ஏன் இவ்வளவு காலம் எடுக்கின்றது?

இலங்கை காவல்துறையினர் கெட்டிக்காரர்கள், பத்திரிக்கையாளர்களை சுடுவார்கள், மக்களை சுடுவார்கள், ஆனால் அவர்களுக்கு ஏன் இதனை மட்டும் கண்டுபிடிக்க முடியாதுள்ளது? என மேலும் அவர் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023