குறைக்கப்படும் அரச ஊழியர்களின் விடுமுறை - கவனம் செலுத்தும் அதிபர்
Ranil Wickremesinghe
Sri Lanka Government
By Dharu
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை காணப்படுகிறது..
இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்ற குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
விடுமுறை நாட்களைக் குறைத்தல்

அதற்கமைய, பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல் மற்றும் வேலை நாட்களை அதிகரிப்பது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கவனம் செலுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் அரச சேவையை மேலும் செயல் திறன் மிக்கதாக மாற்றுவதுடன் அரச சேவையை பொதுமக்கள் தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி