அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் : ரணிலை விமர்சித்த ஹரிணியை சாடும் நிமல்கா

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Government Employee Harini Amarasuriya
By Sathangani Nov 04, 2024 05:07 AM GMT
Report

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்த விடயங்களை பிரதமர் ஹரிணி (Harini Amarasuriya) விமர்சித்து வருவதை வன்மையாக கண்டிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப்பட்டியல் உறுப்பினர் நிமல்கா பெர்ணான்டோ (Nimalka Fernando) தெரிவித்துள்ளார்.

அரச நிர்வாகம் தொடர்பில் எந்த அனுபவமும் இல்லாத பிரதமர் ஹரிணி, சிரேஷ்ட அரசியல் தலைவரான ரணில் விக்ரமசிங்க சொல்லவந்த விடயத்தை புரிந்துகொள்ளாமல் அவரை விமர்சித்து வருவது பிரதமரின் அகங்காரத்தையே எடுத்துக் காட்டுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் (Colombo) அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் காவல் நிலையத்தில் முறைப்பாடு

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் காவல் நிலையத்தில் முறைப்பாடு

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி 

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து அதன் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் : ரணிலை விமர்சித்த ஹரிணியை சாடும் நிமல்கா | Govt Employee Salary Issue Harini Criticizes Ranil

அதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டிருந்தது. அமைச்சரவை அனுமதித்த விடயத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் செயலாளரின் பொறுப்பாகும். அதுதான் அரச நிர்வாக நடைமுறையாகும்.

ஆனால் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த விடயங்கள் பொய் எனவும் அமைச்சரவையின் தீர்மானத்தை மறுப்பதாகவும் தெரிவித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்து வருகிறார்.

சிறீதரன் விரைவில் முகவரி அற்றுப் போய் விடுவார் - எச்சரிக்கும் கே வி தவராசா

சிறீதரன் விரைவில் முகவரி அற்றுப் போய் விடுவார் - எச்சரிக்கும் கே வி தவராசா

பிரதமருக்கு அரசியல் அனுபவம் இல்லை

பிரதமர் ஹரிணிக்கு அரசியல் அனுபவம் இல்லை. அரச நிர்வாக நடைமுறைகள் தெரியாது. அவர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்தவர். அவர்  படித்த ஒருவர் என நாங்கள் அவர் தொடர்பில் சந்தோசப்பட்டோம்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் : ரணிலை விமர்சித்த ஹரிணியை சாடும் நிமல்கா | Govt Employee Salary Issue Harini Criticizes Ranil

இருந்த போதும், நாட்டின் சிரேஷ்ட அரசியல் தலைவர், இந்த நாட்டில் பல தடவைகள் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அவர் மோசமான முறையில் விமர்சித்து வருவதை காணும்போது அவர் தொடர்பில் இருந்து வந்த நல்லெண்ணம் இல்லாமல் போயிருக்கிறது. அவரது அகங்காரத்தையே இது எடுத்துக்காட்டுகிறது.

நாட்டின் அரசியல் யாப்பு தொடர்பில் அவருக்கு போதிய அறிவு இல்லாததாலே அமைச்சரவையின் தீர்மானம் குறித்து அவர் பொய் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தார். அதனாலே அரசியல் யாப்பு தொடர்பில் கற்றுக்கொடுப்பதற்கு தயார் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

பொதுத் தேர்தல் : மூன்றாவது நாளாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

பொதுத் தேர்தல் : மூன்றாவது நாளாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

அனுபவமுள்ளவர்களிடம் கேட்டறிதல் 

பிரதமருக்கு ரணில் விக்ரமசிங்கவிடம் கற்றுக்கொள்ள தேவையில்லை என்றால், அவர்களின் கட்சியில் அரச நிர்வாகம் தொடர்பில் கொஞ்சமேனும் அனுபவமுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) ஆகியோரிடமாவது கேட்டறிந்து பதிலளித்திருக்க வேண்டும்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் : ரணிலை விமர்சித்த ஹரிணியை சாடும் நிமல்கா | Govt Employee Salary Issue Harini Criticizes Ranil

நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்து வரும் பிரதமர், இவ்வாறு மோசமான முறையில் செயற்படுவது, அவர்களின் கட்சியின் உண்மையான சுயரூபத்தையே எடுத்துக்காட்டுகிறது.

எந்த அரசியல் அனுபவம் இல்லாத பிரதமர், சிரேஷ்ட அரசியல் தலைவரை விமர்சிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். அத்துடன் வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கிறார்.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எந்த ஆலாலோசனையும் இல்லாமல் அதனை செய்ய முடியாது. அவ்வாறு சம்பள அதிகரிப்பு செய்வதாக இருந்தால் உதய செனவிரத்ன (Udaya Seneviratne) குழுவின் பரிந்துரைக்கமையவே மேற்கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.

கருணா - பிள்ளையான் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: நால்வர் கைது

கருணா - பிள்ளையான் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: நால்வர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025