அதிபர் - ஆசிரியர்களின் சம்பள உயர்வு - அரசிடம் பறந்த கோரிக்கை
ஆசிரியர்'அதிபர்களுக்குள்ள சம்பள உயர்வு, பதவிஉயர்வு என பல முரண்பாடுகள் காணப்படுகின்றன, இதனை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் 2025.07.01ல் இருந்து பதவி உயர்வு முறைமையை மாற்றி பரீட்சை மூலமாக கூறப்பட்ட போதிலும் இதுவரைக்கும் எந்தவித செயல்பாடும் இல்லை.
விசேட கொடுப்பனவு
சம்பள முரண்பாடாக மூன்றில் ஒரு பங்கு தான் வழங்கப்பட்டுள்ளது மீதி இரு பங்குகளையும் வழங்க வேண்டும்.

இது போன்று வலயரீதியான பிரச்சினைகளும் ஆசிரியர்களுக்கு உண்டு இதனையும் தீர்க்க வேண்டும். இது தொடர்பில் கடந்த சனிக் கிழமை பிரதமருடன் பேசியுள்ளோம் இதற்கான தீர்வை எதிர்வரும் 30க்குல் தீர்வு வேண்டும்.
அநேகமாக தொழிற் சங்கத் தலைவர்களே இதனுடன் இணைந்த அமைச்சர்களாக உள்ளனர். அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட வேண்டும்.
விசேடமாக கிழக்கு மாகாணத்தில் இடமாற்ற சபை உருவாக்கப்படுகிறது சில இடங்களில் முறையற்ற இடமாற்றம் நடைபெறுகிறது.
இடமாற்றம் முறையாக கொள்கைக்கு அமைய இடம் பெறவேண்டும். இதனால் பல ஆசிரியர்கள் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசியல் தலையீடு
அதிபர் நியமனங்கள் அரசியல் தலையீடு இன்றி வழங்கப்பட வேண்டும். பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் நிலவினால் நேர்முகப்பரீட்சை மூலமாக சுற்றரிக்கையின் பிரகாரம் முறையாக இடம் பெற வேண்டும்.

பொதுவாக ஜனநாயக ரீதியாக இருக்க வேண்டும் எனவும் பயங்கரவாத தடை சட்டத்தை எதிர்க்கிறோம்.
கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் சரியாக இருக்க வேண்டும். அரசாங்கம் ஜனநாயக ரீதியாக செயற்படவும் மக்களுக்கு சார்பாகவும் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |