குருக்கள்மடம் மனிதப்புதைகுழி பகுதியை ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்த அனுமதி
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசத்தை Magneto tellyurics audio frequency என்ற ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருகையில்,
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை வியாழக்கிழமை(14.05.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் திறந்த மன்றிலே அழைக்கப்பட்டிருந்தது.
கள விஜயம்
அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் சமூகமளித்திருந்தனர்.

அதன்போது குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு நேற்று பிற்பகல் அப்பகுதியில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது ஏற்பட்ட சடுதியான மழை காரணமாக கள ஆய்வினை முன்கொண்டு செல்வதில் சில தடங்கல்கள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் குறித்த வழக்கு இன்று (15.05.2026) திறந்த மன்றிலே அழைக்கப்பட்டது.
இதன்படி அப்பகுதியில் Magneto tellyurics audio frequency என்ற ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு மன்றால் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த அடிப்படையிலே பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஸ்கேனிங் பொறிமுறைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இந்த வழக்கானது மீண்டும் மேலதிக நடவடிக்கைகளுக்காக எதிர் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |