இன்று இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பலத்த காற்று
அத்தோடு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை
🛑கடல் பிராந்தியங்களில்...!
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்தும் ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும் ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |