வெளிநாடு பறந்தார் கண் மருத்துவர் - ஆதரவற்ற நிலையில் நோயாளிகள்
இலங்கையில் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
இதுவரை 5000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இரத்தினபுரி கஹவத்தை வைத்தியசாலையின் கண் வைத்தியர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆதரவற்ற நிலையில் நோயாளிகள்

இதனால் சிகிச்சைக்கு வரும் ஏராளமான நோயாளிகள் தற்போது ஆதரவற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
கஹவத்த, கொடகவெல, ஓபநாயக்க, பெல்மடுல்ல, பலாங்கொட, வெலிகேபொல பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் நோயாளர்கள் அநாதரவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு நாட்கள் கண் கிளினிக்

இந்த மருத்துவமனையில் வாரத்தில் ஆறு நாட்கள் கண் கிளினிக் நடத்தப்படுகின்றன, மேலும் ஒரு நாளைக்கு 150 முதல் 200 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த மாதம் கண் சிகிச்சை நிபுணர் வெளியூர் சென்றதால் கண் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த மருத்துவமனைக்கு கண் சிறப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் எனவும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.