ஐ.நாவில் தொலைநோக்கு தாக்கத்திற்குள்ளாகும் சிறிலங்கா - வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கும் ஆபத்து!

Human Rights Council United Nations Sri Lanka Philippines
By Kalaimathy Sep 19, 2022 10:04 AM GMT
Report

ஐக்கிய நாடு மனித உரிமைகள் பேரவையில் இந்த தடவை சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தில், முன்னைய தீர்மானங்களை காட்டிலும் பரந்த மற்றும் தொலைநோக்கு தாக்கங்கள் இருக்கக்கூடும் என்பதை சிறிலங்காவின் வதிவிடப்பிரதிநிதி ஏற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மனித உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய, 'பொருளாதாரக் குற்றங்களுக்கு' பொறுப்பான அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் பயணத் தடைகளை எதிர்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் உள்ள தூதர்களை கோடிட்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்காவை தண்டிக்க வேண்டும் என்றால், அது பெரியளவில் நடந்த காலனித்துவ காலத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு ஆதரவு குரல்

ஐ.நாவில் தொலைநோக்கு தாக்கத்திற்குள்ளாகும் சிறிலங்கா - வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கும் ஆபத்து! | Human Rights Sri Lanka United Nation India Japan

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த போதே பிலிப்பைன்ஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இது இலங்கையை ஆட்சி செய்த பிரித்தானியா, அந்த காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும், சிறிலங்காவிற்கு எதிராக தற்போது தீர்மானத்தை கொண்டு வந்திருக்கும் பிரித்தானியாவை கண்டிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.

இந்த நிலையில் சிறிலங்காவிற்கு எதிரான வாக்கெடுப்பின் போது இந்தியா, நேபாளம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கப்படலாம்

ஐ.நாவில் தொலைநோக்கு தாக்கத்திற்குள்ளாகும் சிறிலங்கா - வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கும் ஆபத்து! | Human Rights Sri Lanka United Nation India Japan

இதேவேளை, மனித உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய, 'பொருளாதாரக் குற்றங்களுக்கு' பொறுப்பான, சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளால் வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள அவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கப்படலாம் எனவும் அதிகாரம் பெற்ற நாடுகளால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் சிறிலங்கா பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புதிய வரைவுத் தீர்மானத்தில் உள்ள 42 பத்திகளில், 14 பத்திகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மற்றவை பெரும்பாலும் 2021 மார்ச் 23 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 46-1 தீர்மானத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

புதிய வரைவில் சேர்க்கப்படவுள்ள சரத்து

ஐ.நாவில் தொலைநோக்கு தாக்கத்திற்குள்ளாகும் சிறிலங்கா - வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கும் ஆபத்து! | Human Rights Sri Lanka United Nation India Japan

இலங்கையின் இணை அனுசரணையுடன் 2015 ஒக்டோபர் 1ஆம் திகதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 30-1 தீர்மானத்தில் இருந்து ஒரு சரத்தும் புதிய வரைவில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்