சர்வாதிகார அரசாங்கம் தொழிற்சங்கங்களை முடக்க முயற்சிக்கிறது - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
People
Sajith Premadasa
SJB
Anuradhapura
Economy
Kekirawa
SriLanka
By Chanakyan
சர்வாதிகார அரசாங்கம் தொழிற்சங்கங்களை முடக்க முயற்சிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் - கெக்கிராவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தொழிற்சங்கங்களை அடக்குவதற்கும், வேலை நிறுத்தங்களை தடுக்கவும் அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டின் வளங்களை நடு இரவில் விற்கும் அரசாங்கம்,தொழிலாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் பக்கமே நிற்கும் எனவும் அவர் மேலும்“ தெரிவித்துள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 13 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்