நாணய நிதியத்தினாலேயே இலங்கைக்கு இந்த நிலை: நீதி அமைச்சர் புகழாரம்

United Nations Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka IMF Sri Lanka Dollars
By Shadhu Shanker Dec 18, 2023 06:35 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தமையாலே நாடு இயல்பு நிலைக்கு திரும்பியது அவ்வாறு இல்லாவிட்டால் நாடு பாரிய பாதாளத்தில் சென்றிருக்கும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 மாத்தளை மாவட்டத்தில் இதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த சில ஆண்டுகளாக, நாடு என்ற வகையில் வீழ்ச்சியடைந்த யுகத்திலேயே நாம் வாழ வேண்டியிருந்தது.

சவால்களுக்கும் மத்தியில் பொறுப்பு

கொவிட் 19 தொற்று, அரசியல் நெருக்கடி காரணங்களால் மக்கள் பாரிய அழுத்தங்களுக்கு ஆளாகினர். நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டது. இன்று கருத்து தெரிவிக்கும் எந்த அரசியல் வாதியும் இந்த நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை.

நாணய நிதியத்தினாலேயே இலங்கைக்கு இந்த நிலை: நீதி அமைச்சர் புகழாரம் | Imf Srilanka Loan Dollers Wijayadasa Rajapaks Said

எமது திறைசேரியில் டொலர் இல்லாமல் போனது. எரிபொருள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த அனைத்து சவால்களுக்கும் மத்தியிலேயே நாங்கள் இந்த நாட்டை பொறுப்பேற்றோம்.

நாங்கள் வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாட்டை கடந்த ஒன்றரை வருடங்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தோம். நாங்கள் எதிர்பார்த்த இலக்குக்கு நாட்டை கொண்டு வந்தோம்.

நாடு வீழ்ச்சியுற்றிருந்த ஒன்றரை வருட காலத்தில் நாட்டின் பணவீக்கம் நூற்றுக்கு 97 வீதமாக இருந்தது. ஆளும் அரசாங்கம் பணவீக்கத்தை நூற்றுக்கு 3வீதம் அளவுக்கு கொண்டுவந்துள்ளோம்.

நீதி அனைவருக்கும் சமம் 

மீண்டும் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு செல்ல இடமளிக்க முடியாது. அது எங்கள் அனைவருக்கும் இருக்கும் பொறுப்பும் கடமையுமாகும். நாங்கள் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது, ஜனநாயகத்தை பாதுகாப்பது பற்றி பேசுகிறோம்.

நாணய நிதியத்தினாலேயே இலங்கைக்கு இந்த நிலை: நீதி அமைச்சர் புகழாரம் | Imf Srilanka Loan Dollers Wijayadasa Rajapaks Said

நீதி அனைவருக்கும் சமம் என்று கூறப்பட்டாலும் அவ்வாறு இடம்பெறுவதில்லை. நாடு ஒன்று முன்னேறுவதற்கு அடிப்படை தேவையாக இருப்பது சட்டத்தின் ஆட்சியாகும்.

ஆட்சியாளருக்கு ஒரு சட்டமும் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் என்றால் நாடொன்று முன்னேறப்போவதில்லை. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தியதன் மூலமே மாத்திரமே அந்த நிலைக்கு வந்துள்ளன. நாங்கள் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தோம்.

இந்த நாட்டின் காவல்துறை அரச சேவை சுயாதீனப்படுத்தினோம். எமது நாட்டின் முன்னேற்றத்துக்கு பிரதான தடையாக இருப்பது ஊழல் என்பதே உலக நாடுகளின் கருத்தாகும்.

வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட தமிழர் கிராமம்! (படங்கள்)

வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட தமிழர் கிராமம்! (படங்கள்)

ஊழல் எதிர்ப்பு சட்டம்

அரச நிதி பயன்பாட்டில் அதிக மோசடி இடம்பெறுவது பெறுகை கோரல் செயற்பாட்டிலாகும். அதனை தடுப்பதற்கு பெறுகை ஆணைக்குழு அமைத்தோம்.

நாணய நிதியத்தினாலேயே இலங்கைக்கு இந்த நிலை: நீதி அமைச்சர் புகழாரம் | Imf Srilanka Loan Dollers Wijayadasa Rajapaks Said

இந்த நாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதை நிறுத்த வேண்டும் என ஆளும் எதிர்கட்சி அனைவரும் தெரிவித்தார்கள். என்றாலும் அது தொடர்பான சட்டத்தை கொண்டுவர யாரும் முன்வரவில்லை.

அத்துடன், நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கு அமைய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை தயாரித்தோம். ஊழலுக்கு எதிராக பேசினாலும் சட்ட மூலத்தை கொண்டுவந்தபோது அது தொடர்பில் பேசிய பல அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் அந்த சட்டமூலத்தை அனுமதித்துக்கொண்டோம்.

அதேபோன்று தேர்தலில் இடம்பெறும் ஊழலை தடுப்பதற்கு தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் கொண்டுவந்தோம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் நாங்கள் அனுமதித்துக்கொண்டோம்.

வடக்கு, கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கு, கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாணய நிதியத்தின் உதவி

தேர்தலில் வெற்றிபெறுவதாக இருந்தால் அதிக வாய்ப்பு இருந்தது ஊழல் வாதிகளுக்காகும். குண்டர்கள், பாதாள குழுக்களின் பலம் இருந்தவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றார்கள். நாங்கள் அந்த கலாசாரத்தை இல்லாமலாக்க தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டத்தை அனுமதித்துக்கொண்டோம்.

நாணய நிதியத்தினாலேயே இலங்கைக்கு இந்த நிலை: நீதி அமைச்சர் புகழாரம் | Imf Srilanka Loan Dollers Wijayadasa Rajapaks Said

அத்துடன் நாங்கள் இந்த நாட்டில் ஊழலை தடுப்பதற்கு சட்டம் அறிமுகப்படுத்தியதாலே சர்வதேச நாணய நிதியம் சர்வதேச பிரஜைகள் எமது நாடு தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டார்கள். நாட்டுக்குள் இடம்பெற்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

நாணய நிதியத்தின் உதவி கிடைத்தமையாலே நாடு இயல்பு நிலைக்கு மாறியது. அவ்வாறு இல்லாவிட்டால் நாடு பாரிய பாதாளத்தில் விழுவதற்கு இடமிருந்தது” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025