இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள ஆதரவு
டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசக் தெரிவித்துள்ளார்.
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் மீட்பு, புனரமைப்பு மற்றும் மீள்தன்மைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்றும் கோசக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மீட்சிச் செயல்பாட்டில் மேலும் உதவுவதற்கான விருப்பங்களை IMF ஊழியர்கள் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கி
மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர மனிதாபிமான உதவி மானியத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்றவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் இந்த மானியம் வழங்கப்படுகிறது என்று ஆசிய வளர்ச்சி வங்கித் தலைவர் மசாடோ காண்டா கூறியுள்ளார்.
சமீபத்திய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மூன்று நாடுகளான இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றிற்கு உடனடி மானியங்களை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முடிவு செய்துள்ளது.
அதன்படி, இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொர்களும், தாய்லாந்து மற்றும் வியட்நாமுக்கு தலா 2 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வங்கி வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |