கனடாவின் அவசர நடவடிக்கை: தூதரக விடயத்தில் இந்தியாவுடன் அதிகரிக்கும் முறுகல் நிலை
கனடாவில் இந்திய தூதகர அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற நிலையில் இந்திய அரசாங்கமும் இந்தியாவிலுள்ள கனேடிய அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.
கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகம் கெடு விதித்திருக்கின்றமையால் கனடா தமது நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் முடிவெடுப்பதற்காக கனடாவிற்கு அக்டோபர் 10ம் திகதி வரையில் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
இந்தியா தரப்பில் கோரிக்கை
இந்நிலையில், டெல்லிக்கு வெளியே பணியாற்றி வந்த தமது தூதரக அதிகாரிகளை கனடா வெளியேற்றி கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கனேடிய தூதரக அதிகாரிகள் சிலருக்கு இந்தியாவில் சமூக ஊடகங்களினால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்தமையாலேயே எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் அதிகாரிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என இந்தியா தரப்பில் முதன் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டதும், கனடா பிரதமர் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சரக அலுவலகங்கள் உறுதி செய்யவில்லை.
இறுக்கமடைய செய்ய விரும்பவில்லை
இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், அதிக எண்ணிக்கையிலான கனேடிய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி அளிப்பதும், நாட்டின் உள் விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்து தலையிடுவதும் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்றார்.

அதேவேளை, இந்தியாவுடனான மோதலை மேலும் இறுக்கமடைய செய்ய விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்