இந்தியாவின் இரட்டை வேடம் : பின்தொடரும் இலங்கையின் சிங்கள தலைவர்கள்
இந்தியாவின் இரட்டைத்தனமான வெளியுறவுக் கொள்கை இலங்கைக்கு சாதகமாக அமைந்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அ. நிக்சன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
“இலங்கையில் இருக்கக்கூடிய சிங்கள தலைவர்கள் சீனாவுடன் பொருளாதார ரீதியான உறவுகளை வைத்துக்கொண்டு அரசியல் ரீதியான உறவுகளுக்கு அவர்கள் அமெரிக்காவை தான் விரும்புகிறார்கள்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
மேற்கு நாடுகளை விரும்புகிறார்கள். ஒரு மேற்குச்சாயம் இலங்கையிடம் இருக்கிறது. அதற்கு பிரதான காரணம் இந்தியா தான்.

ஏனென்றால் இந்தியாவைக் பொறுத்தவரையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது இரட்டைக்கொள்கை உடையது.
ரஷ்யா, சீனாவோடு இருக்கக்கூடிய வர்த்தக உறவுகளுக்கு அப்பால் அரசியல் ரீதியாக அமெரிக்காவோடு கூட்டு வைத்திருக்கின்றார்கள்.
ரஷ்யா, சீனாவுடனான தனது வெளியுறவுக் கொள்கையை நேரடியாக காண்பிக்காமல் இரட்டைத்தனமான கொள்கையை காண்பிக்கிறார்கள்.
இந்த இரட்டைத்தனமான பண்புதான் இலங்கைக்கு சாதகமாக அமைந்திருக்கிறது” என அவர் கூறுகிறார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியின் முழுமையான காணொளி