காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர்
Jaffna
Indian High Commissioner Santosh Jha
By Kajinthan
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்சந்தோஷ் ஜா இன்றையதினம் காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.
இவ்வாறு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சிவகங்கை கப்பல் அதிகாரிகளுடனும், மாலுமிகளுடனும் கலந்துரையாடினார். அத்துடன் கப்பல் போக்குவரத்து குறித்து பயணிகளிடமும் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் கப்பலையும் பார்வையிட்டார்.
இதன்போது யாழ்ப்பாணம் இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி, கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன், கப்பல் நிறுவனத்தின் அதிகாரியான பகீரதன், கப்பல் நிறுவனத்தின் இந்தியாவுக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளர், கப்பல் நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகள், சுங்தத் துறை அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி