இந்தியாவிலிருந்து மற்றுமொரு முக்கிய அதிகாரி இன்று கொழும்பு விரைகிறார்
இந்திய இராணுவத்தின் தளபதி ஜெனரல் முகுந்த் நரவனே(Mukund Naravane) இன்று இலங்கைக்கு வர உள்ளார்.
அவரது வருகையின் முக்கிய நோக்கம், இலங்கையில் செயல்படும் இந்திய-இலங்கை கூட்டு ராணுவப் பயிற்சியான 'மித்ர சக்தி'யில் பங்கேற்பதாகும்.
இந்திய இராணுவத் தளபதி ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார். மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (gotapaya Rajapaksa), பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன (Kamal Gunaratne) மற்றும் பிற மூத்த அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
இந்திய இராணுவத் தளபதி நாளையதினம் இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு வர உள்ளதாகவும், அவரை வரவேற்க இராணுவத் தளபதி சவேந்திர சில்வா(Shavendra Silva) ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வெளியுறவு செயலாளரின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் முடிந்த கையுடன் இந்திய இராணுவ தளபதியின் இலங்கைக்கான விஜயம் தொடங்குகின்றமை முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.