ரி20 போட்டியில் இந்திய அணி படைத்த சாதனை
இங்கிலாந்து அணிக்கு(england cricket) எதிரான 5வது மற்றும் இறுதி ரி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி (india cricket )150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பெற்றுக்கொண்டது.
ரி 20 சர்வதேச போட்டியில் அணியொன்று பெற்ற இரண்டாவது சிறந்த வெற்றி வித்தியாசம் இதுவாகும்.
ஓட்டங்களை குவித்த இந்திய அணி
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு (2) நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 247 ஓட்டங்கள் குவித்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக,களமிறங்கிய இங்கிலாந்து 10.3 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அபிஷேக் சர்மாவின் அனல் பறந்த ஆட்டம்
இந்திய இனிங்ஸில் வழக்கமான ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா, வெறும் 54 பந்துகளில் 135 ஓட்டங்கள் குவித்தார். அவரது இனிங்ஸில் 13 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். இது அபிஷேக்கின் இரண்டாவது ரி 20 சதமாகும்.
இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றியது. இந்தப்போட்டியின் ஆட்ட நாயகனாக அபிஷேக் சர்மா,தொடர் நாயகனாக வருண் சக்கரவர்த்தி தெரிவு செய்யப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |