சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமா சிறிலங்கா? கொழும்பு விரையும் அதிகாரிகள்
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் கொழும்பு விரைவது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட முக்கியமான இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் அரசாங்கம் திணறி வருகிறது.
தற்போது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 2.31 பில்லியன் டொலராக இருப்பதால் இலங்கை திவாலடையும் அபாயத்தில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும் இதுவரை சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவில்லை. இச்சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கை வருகை தருகிறார்கள்.
இவ் விஜயத்தின் போது சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவையும் ஏனைய அரச அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளுமா என மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.